கடல் யுத்தத்தை தொடக்கினார் நெல்சன்
சிங்கத்தின் பலம் தரையில் என்றால், முதலையின் பலம் நீரில் என்பது போல பிரிட்டனின் பலம் முழுக்க அந்த கடற்படைதான்.
உலகம் முழுக்க அவர்கள் கட்டியாண்டதற்கு அந்த கடற்படை மிக அவசியமானதாக இருந்ததால், மிக வலுவாக வைத்திருந்தார்கள்
அதன் பலம் நீண்ட வரலாறுடையது. ஹிட்லரால் கூட அதனை வெல்ல முடியவில்லை. அப்படிபட்ட பிரிட்டன் கடற்படையுடன் தான் எகிப்து கரையில் நெப்போலியன் மோதினான்.
நெப்போலியனை மிரளவைத்த நெல்சன்
பிரிட்டிஷாரின் கப்பல்களும் அவர்களின் வியூகமும் மிக கடுமையாய் இருந்தன, அதிலும் நெல்சன் போக்கு காட்டி ஆடிய ஆட்டத்தில் நெப்போலியன் தடுமாறினான்
அதுவும் அது அவனுக்கு முதல் கடற்போர்.
நெப்போலியனும் நெல்சனை அசால்ட்டாக சமாளித்துகொண்டுதான் இருந்தான். ஆனால் கொம்பன் சுறா போன்ற பிரிட்டன் கடற்படையினை எதிர்கொள்ள அவனுக்கு மேலதிக படையும் பணமும் தேவைபட்டது
ஆனால் பிரான்ஸில் ஆண்டுகொண்டிருந்த டைரக்டர்ஸ் குழு அதனை புறந்தள்ளியது, இவ்வளவுதான் நிதி முடிந்தால் வெற்றியோடு வா , இல்லாவிட்டால் பிழைத்து வா, கஜானா காலி என பதில் அனுப்பிவிட்டார்கள்
வேறு வழியின்றி பின் வாங்கினான் நெப்போலியன், அவன் தொடர்ந்து எழுதிய கடிதங்களுக்கும் பலனில்லை
நெல்சன் நெப்போலியனின் கப்பல்படையினை நாசம் செய்தார், தந்திரத்தில் மிகுந்த நெப்போலியன் கப்பல்களை விட்டுவிட்டு அவரை கொல்ல முயற்சிக்க நெல்சனுக்கு ஒரு கண் போயிற்று
ஆனாலும் நெல்சனின் கட்டளைபடி போரிட்ட பிரிட்டன் படைகள் முன்னால் நெப்போலியனால் நிற்க முடியவில்லை
பிரிட்டனின் நீர்வழிதடத்தை தடுக்கும் அவனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எகிப்து பக்கம் கரை ஒதுங்கினான் நெப்போலியன்
பின்னாளில் அவன் பிரிட்டன் மீது வெறியோடு அலைந்ததற்கும், இறுதிவரை பிரிட்டனின் கடற்படையினை எதிர்கொள்ள தயங்கியதற்கும் இதுதான் தொடக்கம்.
நெல்சனால் நெப்போலியனுக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவால்தான் அவரால் திப்பு சுல்தானுக்கு உதவமுடியாமல் போனது
இருவரும் இணைந்தால் பேராபத்து என எண்ணிய பிரிட்டன், நெப்போலியனை முடக்கி, அதற்குள் திப்புவினையும் தீர்த்துகட்டியது
இதெற்கெல்லாம் காரணம் அந்த நெல்சன்.
எகிப்து பக்கம் திரும்பிய நெப்போலியன் சும்மா இருக்கவில்லை, அங்கிருந்து இன்றைய இஸ்ரேல், சிரியா வழியாக துருக்கி செல்ல முயற்சித்தான்
துருக்கிய சுல்தானோடு மோதினான் நெப்போலியன், மிக உக்கிரமான சண்டையில் அன்றைய பாலஸ்தீனத்தை வென்றான், அதிலிருந்த மிக பிரசித்திபெற்ற வியாபார கோட்டையான ஏகர் கோட்டை அவன் வசமாயிற்று
தொடர்ந்து முன்னேறினான், அவன் தாக்குதலில் சுல்தானிய படை பின் வாங்கியே இருந்தது. நெல்சனிடம் பெற்ற கடல் தோல்வியினை துருக்கி சுல்தானிடம் கோபமாக காட்டிகொண்டிருந்தான்
அப்பொழுது இரு விஷயங்கள் அவனுக்கு குறுக்கீடாக வந்தன
ஒன்று அவர் நிதி கேட்கும் பொழுதெல்லாம் அந்த பிரான்ஸ் டைரக்டர்ஸ் குழு மறுத்தே வந்தது, ஒரு கட்டத்தில் தோட்டாவினை சேமிக்க துப்பாக்கி முன்னிருந்த கத்தியால் எதிரிகளை கொடூரமாக கொன்றது நெப்போலியன் படை
இன்னொன்று யுத்த களத்தில் பரவிய பிளேக் நோய். நிதிதட்டுபாட்டை கூட சமாளித்த நெப்போலியனுக்கு பிளேக் நோய் பெரும் அச்சுறுத்தலானது
யுத்தத்தை நிறுத்தி தீரும் அவசியம் இருவருக்குமே இருந்தது.
இப்பொழுதும் எகிப்திலும் பாலஸ்தீனத்திலும் பிரான்ஸ் இருப்பை பலபடுத்த நிதி கேட்டான் நெப்போலியன், வழக்கம் போல கஜானா காலி, வீணான யுத்ததிற்கு பணம் தரமுடியாது என சொல்லிவிட்டார்கள்
அப்படி சொன்னாலும் கூட நெப்போலியனுக்கு கோபம் வந்திருக்காது ஆனால் இந்த வரியும் இருந்தது
“நெல்சனுடன் தோல்வி, இப்பொழுது ஆட்டோமான் துருக்கியருடனும் தோல்வி, உன்னை நம்பி பணம் கொட்டமாட்டோம்”
என்ன கொடுமை இது? நான் என்ன ஜோசப்பினுக்காகவா இந்த எகிப்தை எல்லாம் பிடித்தேன்? எல்லாம் பிரான்சுக்காக பின் ஏன் என்னை தோற்ற ராணுவ அதிகாரி என்றே சொல்கின்றார்கள் என்ற கோபம் அவனுக்கு வந்தது
இத்தனைக்கும் பன்னீர் செல்வம் போல அவன் வைத்த அடிமைகள் அந்த டைரக்டர்கள், அதுவரை அடிமையாய் இருந்தவர்கள் பதவிக்கு வந்தபின் மாறிவிட்டார்கள்
எகிப்தினை தன் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டு பிரான்ஸ் திரும்பினான் நெப்போலியன்
அங்கு நிலமை படுமோசமாக இருந்தது, எங்கும் சிக்கல், அரசு திணறியது
ஆண்டாண்டு காலமாக அரசனின் அதிகாரத்தில் இயங்கிய நாட்டில் திடீரென மக்களாட்சி சம உரிமை ஜனநாயகம் என மாற்றியபொழுது அதனை எப்படி நிர்வகிப்பதில் குழப்பம் என்பது நெப்போலியனுக்கு புரிந்தது
இனி பன்னீருக்கு பதில் பழனிச்சாமி என சசிகலா முடிவெடுத்தது போல முடிவெடுத்து கலகம் தொடங்கினான்
அந்த பழைய டைரக்டர்ஸை விரட்டி புதிய டைரகடர்களை அமர்த்தினான், அதிலொரு திருத்தம் இந்த புதிய டைரக்டர்கள் கான்சல் எனும் குழுவில் இருப்பார்கள் அக்குழுவின் தலைவர் தான் என்பதுதான் அத்திருத்தம்
அதாவது நாட்டின் அரசன் அல்ல, மாறாக தலைவன் நெப்போலியன்
அதிகாரம் கிடைத்தபின் நெப்போலியனின் மனம் பிரிட்டனை போட்டு சாத்தவே சிந்தித்தது, ஆனால் அதற்கு முன்பு நாட்டில் பல சட்டங்கள் எழுதவேண்டியிருந்தது
குழப்பமான நாட்டில் பொருளாதாரம் படுத்துவிடும், மோடியின் இந்தியாவே சாட்சி. அப்படி பிரான்சும் படு வீக்கானது
இது அக்கம் பக்கம் தெரியவர, இத்தாலிக்கு குளிரிவிட்டது
நாங்கள் பாப்பரசர் வாழும் புனித இத்தாலி, நெல்சனால் தோற்கடிகபட்ட நெப்போலியனுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம், இனி நாங்கள் பிரான்ஸின் அடிமை இல்லை என அறிவித்தது
எச்சரித்தான் நெப்போலியன், பலன் இல்லை
தலைவன் ஆகிவிட்டால் நெப்போலியன் களம் காணமாட்டான் என முடிவா? என பெரும் படையுடன் ஆல்ப்ஸ் மலையினை கடந்தான்
அடித்த அடியில் அலறியது இத்தாலி, போப்பாண்டவருக்கு ஆளனுப்பினான்
“நான் மறுபடியும் வந்துவிட்டேன், இத்தாலி துள்ள்ளுவதற்கு போப் எனும் பெரும் சக்தி அங்கு இருப்பதுதான் காரணம். இத்தோடு இத்தாலி நிறுத்திகொள்ள வேண்டும்
இல்லாவிட்டால் போப் என்றும் பார்க்கமாட்டேன், புனித மண் எனவும் பார்க்கமாட்டேன், கர்த்தரை விட எனக்கு பிரான்சே முக்கியம்”
போப்பாண்டவரை ஆட்டிவைத்தவர்களில் முக்கியமானவன் நெப்போலியன்
அதன் பின் இத்தாலி வம்பு செய்யவில்லை
இனி எந்த நாட்டை பிடிக்கலாம், பிரான்சுக்கு எப்படி வருமானம் பெருக்கலாம் என அவன் சிந்தித்துகொண்டிருந்தபொழுது அவனுக்கு இன்னொரு பிரச்சினை முளைத்தது
ஆம் இம்முறை பழனிச்சாமிகள் போர்கொடி தூக்கினர்
என்னடா இது, காலில் விழுந்து கிடக்கின்றார்கள். பதவி கிடைத்தவுடன் உரசுகின்றார்கள். இந்த யழ்வு நாற்காலியில் எவனை வைத்தாலும் மாறிவிடுவான் போல
இனி வேலைக்காகது, இதில் ஒவ்வொருவனையும் வைத்து அழகு பார்க்க முடியாது
நாமே அமர்ந்தால் என்ன? எவன் எதிர்ப்பான்? மக்கள் நம்மை கொண்டாடும்பொழுது அஞ்ச என்ன இருக்கின்றது?
பிரான்சினை வளர்க்க அவனுக்கு சக்திவாய்ந்த பதவி தேவைபட்டது, அது அல்லாமல் பிரான்சினை உருவாக்க முடியாது என்பதும் புரிந்தது
பெரும் அறிவிப்பினை வெளியிடான் அது மொத்த ஐரோப்பாவினையும் அலற செய்தது, அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்த நேரமது
வருவான் வாமணன்…