மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டார் மா.நடராசன், சீறியபடி வந்து நிற்கின்றார்.
உடல்நலம் குன்றி மாற்று கல்லீரல் பொருத்திய நடராசன் தன் பேட்டியினை வழங்கியிருக்கின்றா, கல்லீரல் கொடுத்தவனுக்கு நன்றி எல்லாம் அதில் இல்லை,மாறாக பலரின் ஈரலை பிடுங்கும் வகையில் பேட்டி இருக்கின்றது இப்படியாக
“நான் இன்னும் இந்தியா முழுக்க செல்வாக்கோடு இருக்கின்றேன், ஒரு போன் போட்டாலே நான் நினைத்ததை சாதிப்பேன்
இந்த ஜெயலலிதா சாவுக்கு எதற்கு விசாரணை ஆணையம். தீர்ப்பு வந்தும் என்ன கிழித்துவிட போகின்றார்கள்? எல்லாம் வீண் குழப்பம்
ஜெயலலிதாவினை நானே உருவாக்கினேன். அவர் வாசித்தது எல்லாம் என்னுடைய எழுத்து, அவர் அறிவித்த திட்டமெல்லாம் என்னுடைய வியூகம். அதனை பின்பற்றியதாலே அவர் வெற்றி கண்டார்
நான் தமிழகத்தில் மகா செல்வாக்கனவன், என் மனைவிக்கு பரோல் கிடைத்ததும் தமிழகம் முழுக்க இருவரும் சுற்றுபயணம் செய்வோம், இந்த அரசை விடமாட்டேன்” என சீறி எழுந்திருக்கின்றார்
அன்னாரின் பேட்டியினை கவனித்தால் சில தொணிகள் தெரியும்
முதலாவது ஜெயா எப்படி செத்தால் என்ன? என்ன முடிவு என்றாலும் யார் கேட்க போகின்றார்கள்? எனும் அலட்டல்
இரண்டாவது விஷயம் ஜெயா எல்லாம் விஷயமே அல்ல, நானே உருவாக்கினேன், என் சொற்படி கேட்டால் யாரும் முதல்வராகலாம் என பழனிச்சாமிக்கு மிரட்டல்.
கடைசி விஷயம் இந்தியா முழுக்க இன்னும் பலரின் தொடர்பில் இருக்கின்றார் நடராசன், அது அரசியலா? கள்ள கடத்தலா? தீவிரவாதமா, நக்சலா என தெரியவில்லை . ஆனால் மத்திய அரசுக்கான மிரட்டல்
இதற்கெல்லாம் காரணம் ஆர்.கே நகர் கொடுத்த வெற்றி, தினகரனை மனமார வரவேற்றது போல தமிழக மக்களும் தன்னையும் தன் மனைவியினை வரவேற்பார்கள் அல்லது வரவேற்க வைக்க முடியும் என நம்புகின்றார் போல
ஆக தமிழக மக்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகின்றது, எப்படி பார்த்தாலும் வசூல் மழை கொட்டபோகின்றது, அதனைத்தான் நடராசன் சூசகமாக சொல்கின்றார்
ஆனால் சில விஷயம் உதைக்கின்றது
தான் சொல்லிகொடுத்ததை செய்துதான் ஜெயா முதல்வர் ஆனார் என்றால், இவர் இன்னும் பல முதல்வரை உருவாக்கி இருக்கலாமே, ஏன் ஜெயாவினையே வைத்திருந்தார் என நாம் கேட்க கூடாது
ஆக ஜெயா ஒன்றுமே இல்லை என மக்கள் மனதில் பதிய வைக்க கிளம்புகின்றார் நடராசன், பார்க்கலாம்
தினகரன், திவாகரன் , விவேக் என ஆளாளுக்கு வரிசை கட்டும் களத்தில் நடராசன் வராமல் அமைதிவராது என்பது இன்னொரு கோணம்
நடராசன் பேட்டியில் இருந்து ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்
“அய்யா ஒரே போனில் நினைத்ததை சாதீப்பீரா? ஒரு போன் போட்டு சசிகலாவினை வெளியில் கொண்டு வந்தால் என்ன? என்றெல்லாம் கேட்க மாட்டோம்
மாறாக இந்த இம்சை பிடித்த ஆட்சியினை ஒரே போனில் கலைத்துவிட கூடாதா?”
எப்படியோ, அன்னார் ஒரே போனில் நினைத்ததை சாதிப்பாரம். வருமான வரிதுறையினை அனுப்பி அவர் கையில் இருக்கும் போனை வாங்காமல் மத்திய அரசோ, பழனிச்சாமியோ நிம்மதியாக இருக்க முடியாது என்பது மட்டும் புரிகின்றது.